பிளஸ் 2 தேர்வு முடிவு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 83 ஆயிரம் பேர் விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 83 ஆயிரம் பேர் விண்ணப்பம்.


பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் தமிழகம் முழுவதும் 83 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தனித் தேர்வர்களுக்கு அதேநாளில் அந்தந்த தேர்வு மையங்களில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோருக்கு 21ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அது குறித்து தெரிந்து கொள்ள வசதியாக விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள்தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் தேர்வுத் துறை அறிவித்து இருந்தது.இதையடுத்து 9ம் தேதி முதல் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டும், மறுகூட்டல் செய்ய வேண்டியும் விண்ணப்பித்து வந்தனர். நேற்று இறுதி நாள். விடைத்தாள் நகல் கேட்டு 79 ஆயிரத்து 953 பேரும், மறுகூட்டல் செய்ய கேட்டு 3,346 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி