ஒரு பாடத்தில் மட்டும்20 ஆயிரம் பேர் தோல்வி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

ஒரு பாடத்தில் மட்டும்20 ஆயிரம் பேர் தோல்வி.


பிளஸ் 2 தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் 20 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் 7.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
77 ஆயிரம் பேர், தோல்வி அடைந்தனர். இந்நிலையில், ஒரு பாடத்தில் மட்டும், 20,018 மாணவர்கள், தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.இரு பாடங்களில், 24,095; மூன்று பாடங்களில், 17, 338; நான்கு பாடங்களில், 9,293; ஐந்து பாடங்களில், 4,200; ஆறுபாடங்களில், 6,466 பேர் என, மொத்தம், 81,410 பேர், தோல்வி அடைந்துள்ளனர்.ஆறு பாடத்தில் தோல்வி அடைந்ததாக கருதப்படும், 6,466 பேரில், 4,000த்திற்கும் மேற்பட்டோர், தேர்வில், 'ஆப்சென்ட்' ஆகி உள்ளனர். அனைத்துப் பாடங்களிலும், 'ஆப்சென்ட்' ஆன மாணவர் எண்ணிக்கை, தேர்ச்சி புள்ளி விவர கணக்கில் வராது.எனவே, 'ஆப்சென்ட்' எண்ணிக்கை போக, தேர்வு எழுதியவர்களில், 77 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி