பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு 26 முதல் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2014

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு 26 முதல் விண்ணப்பிக்கலாம்.


பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் கோரி, 26ம் தேதி முதல், 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, 23ம் தேதி காலை (நாளை), 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வை, தனிதேர்வாக எழுதிய மாணவர்களுக்கு, 23ம் தேதியே, சம்பந்தபட்ட மையங்களில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.மாணவர்கள், எந்த பாடத்திலும், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு, வரும், 26ம் தேதி முதல், 31ம் தேதி மாலை, 5:00 மணி வரை, பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலமாகவும், தனிதேர்வு மாணவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல் கட்டணமாக, மொழிப்பாடங்களுக்கு, தலா, 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த தொகையை, பள்ளியிலும், தனிதேர்வு மையங்களிலும், பணமாக செலுத்த வேண்டும்.தேர்வில், தோல்வி அடையும் மாணவர்களுக்கு, ஜூன் இறுதியில், உடனடி தேர்வு நடத்தப்படும். இதற்கு, வரும், 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வு கட்டணமாக, 125 ரூபாயும், பதிவு கட்டணமாக, 50 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த தொகையை, பள்ளியிலும், தனி தேர்வு மையங்களிலும் செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி