பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு டிபிஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் இணைய தளம் வழியாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும், அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியல்
பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் இன்றே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் இன்றே தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே தனித் தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் பட்டியலை அந்தந்த தேர்வு மையங்களில பெற்றுக் கொள்ள வேண்டும்.
மறுகூட்டல்
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணபிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் தேவையா, அல்லது மதிப்பெண் மறு கூட்டல் செய்யவேண்டுமா என்பதை முன்கூட்டியே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பிறகே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
சிறப்பு துணைத் தேர்வு
மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணபிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதி தேர்வு மையங்களிலும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தாங்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி