சென்னை: வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வகுப்பறையில், ஆசிரியை உமா மகேஸ்வரி, 9ஆம் வகுப்பு மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
சென்னை சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மாணவனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாகவும், மாணவனை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், அங்கு மாணவனுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொலை ஏன்?
மாணவர்களை அணுகுவதில் மென்மையானப் போக்கைக் கடைபிடிப்பவர் எனக் கூறப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி, சம்மந்தப்பட்ட மாணவனின் ப்ராகிரஸ் ரிப்போர்ட்டில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் கல்வி நிலை மோசமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ரிமார்க்ஸைக் கண்ட அந்த மாணவனின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டினர். இதனால், கோபமுற்ற மாணவன் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியையை குத்திக்கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு ?????????
ReplyDeleteNO secure
ReplyDelete