அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என இயக்குநர் பதில்; செ.முத்துசாமி பிரத்யேக பேட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என இயக்குநர் பதில்; செ.முத்துசாமி பிரத்யேக பேட்டி.


இன்று மதியம் பள்ளிக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.
அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பொழுது தற்பொழுது நடைமுறையில் உள்ள விதிகளை மாற்றி (அதே பள்ளியில் பணிப்புரிபவர்கள் மட்டும் மாறுதலுக்கு அனுமதித்தல்) அதே பள்ளியில்பணிப்புரிபவர்கள் விருப்பின்மை தெரிவித்தால் ஒன்றியத்தில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அலகு விட்டு அலகு மாறுதல் வழங்க இந்தாண்டு நடவ்டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சந்திப்பின் பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத் தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி