தமிழகத்தில், 'கல்பனா சாவ்லா' விருது பெற, பெண்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக முதல்வர், ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு, 'கல்பனா சாவ்லா' விருது வழங்குகிறார். இவ்விருதில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் ஆகியவை அடங்கும். தமிழகத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே, இவ்விருதைப் பெற தகுதியுடையவர்கள். இந்த ஆண்டு, இவ்விருதை பெற விரும்புவோர், விரிவான தன் விவரக்குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், 'அரசு முதன்மைச் செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை' என்ற முகவரிக்கு, ஜூன் 30ம் தேதிக்கு முன், அனுப்பி வைக்க வேண்டும். விருது பெறத் தகுதியுள்ளவரை, இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட, தேர்வுக் குழுவினர் தேர்வு செய்வர் என, பொதுத்துறை அரசுமுதன்மை செயலர், யதீந்திரநாத் ஸ்வைன் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி