தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் விவகாரம் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2014

தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் விவகாரம் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை.


தலைமை ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை ஆசிரியர்கள் நேற்று மாலை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9ந் தேதி அன்று வெளியானது. குமரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்த 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர 12 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கலெக்டரின் அறிவுரையின்பேரில் முதன்மை கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் 3 தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் ஆகியகோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு 300க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று மாலை வந்தனர்.ஆனால் அங்கு முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் இல்லை.

முதன்மை கல்வி அதிகாரி இங்கு வந்தால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என கூறி முதன்மை கல்வி அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இந்த தகவல் முதன்மை கல்வி அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இரவு ஆகியும் முதன்மை கல்வி அதிகாரி வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் அங்கேயே இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி