ஆசிரியர்கள் இட மாறுதலுக்கு முன் 'சர்பிளஸ்' விவரம் சேகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

ஆசிரியர்கள் இட மாறுதலுக்கு முன் 'சர்பிளஸ்' விவரம் சேகரிப்பு




தமிழகத்தில், ஆசிரியர்களுக்கு இடமாறுதல், 'கவுன்சிலிங்' நடத்துவதற்கு முன், பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர் விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் பதவி உயர்வு மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங்குக்கு முன், கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் குறித்து விவரம் சேகரிப்பதால், பணிநிரவல் அடிப்படையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடும் என்ற தவகல் பரவியுள்ளது. பல லட்சம் ரூபாய் கொடுத்து, புதிய இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றவர்கள், இதனால் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'குடும்பம் ஒரு பக்கம், பணி ஒரு பக்கம் என, பல ஆண்டுகளாக சிரமப்பட்டு, ஓராண்டுக்கு முன் தான், பணிமாறுதல் பெற்றேன். ஆனால், அதற்குள், 'சர்பிளஸ்' கணக்கெடுப்பு நடத்தி, மீண்டும் பணிமாற்றம் செய்ய முயற்சி செய்கின்றனர்' என்றார்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க பொதுச் செயலர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: வரும் ஜூன் மாதத்துக்குள், வழக்கமாக நடத்தப்படும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். இதற்கு பின், சர்பிளஸ் ஆசிரியர்களை கணக்கெடுத்து, பணிநிரவல் செய்ய கல்வி அதிகாரிகள் முன்வர வேண்டும். இந்த முறையை மாற்றினால், பல ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி