சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வார இறுதியில் வெளியீடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வார இறுதியில் வெளியீடு?


சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடந்தது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை 13 லட்சத்து 28 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வை 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்சி தேர்வுகள் முடிந்து, 2 மாதங்கள் அல்லது 45 நாட்களுக்கு பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தன.ஆனால், இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு, விடைத்தாள் திருத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு தென் மண்டலத்துக்கான தேர்வு முடிகள் மே 27 மற்றும் 28ம் தேதிகளில் வெளியானது.இந்த ஆண்டும் அது போலவே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரமே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி