10ம் வகுப்பு அறிவியல் செய்முறைக்கு நாளை முதல் பதிவு தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

10ம் வகுப்பு அறிவியல் செய்முறைக்கு நாளை முதல் பதிவு தொடக்கம்.


அடுத்த கல்வி ஆண்டில் (2014-2015) நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் (முதல் முறையாக பாடங்களையும் தேர்வு எழுத உள்ளவர்கள்),
ஏற்கனவே 2012க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாமல் இருந்தால் இப்போது பதிவு செய்து கொள்ள வேண்டும்.அனைத்து தனித் தேர்வர்களும் நாளை முதல் 30ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒதுக்கீடு செய்துள்ள பள்ளிகளுக்கு சென்று செய்முறை வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.பயிற்சி வகுப்பில் 80 சதவீதம் வருகை தந்த தனித் தேர்வர்கள் மட்டுமே அடுத்த கல்வி ஆண்டில் நடக்க உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத தேர்வர்களின்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் ஷ்ஷ்ஷ்.tஸீபீரீமீ.வீஸீ என்ற இணைய தளத்தில் நாளை முதல் 30ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதை இரண்டு நகல்கள் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் 30ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி