உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி
தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்விஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் பவுல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரராஜன், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பணிநிரவல் மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும், முறையற்ற மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு முறையில் பொதுமாறுதல்களை உடனே வழங்க வேண்டும், பட்டதாரிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஜூன் 12-ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்ப உபரி ஆசிரியர்களை என்ன செய்வது?
ReplyDelete