ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள, 'அரசாணை 363'ஐ எதிர்த்து, ஓய்வூதியதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க செயலர், சுப்ரமணியன் கூறியதாவது: ஓய்வூதியம் தொடர்பாக, அரசு சமீபத்தில் வெளியிட்ட, 'அரசாணை 363' ஓய்வூதியர்களுக்கு பாதகமாக உள்ளது. புதிய அரசாணையின்படி, ஓய்வூதியம் குறையும். எனவே, புதிய அரசாணையை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதுகுறித்து, சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்க, சங்க செயற்குழுக் கூட்டம், வரும், 14ம் தேதி, பல்லாவரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், புதிய அரசாணை குறித்து, சங்க துணைத் தலைவர் ராஜகோபால் விளக்க உள்ளார். உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து, செயற்குழு உறுப்பினர் சண்முகவேலு விவரிக்க உள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி