ஒரே மாணவி ஒரே ஆசிரியை: மானாமதுரை பள்ளியின் நிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2014

ஒரே மாணவி ஒரே ஆசிரியை: மானாமதுரை பள்ளியின் நிலை


மானாமதுரை அருகே செய்யாலூர் பள்ளிக்கு மாணவர்கள் வருகை இல்லாததால், ஒரு மாணவிக்காக, ஆசிரியர் பாடம் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை, மானாமதுரை ஒன்றியம், செய்யாலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, கடந்த ஆண்டில், 5 மற்றும் 3 ம் வகுப்பில் 2 மாணவிகள் மட்டும் படித்தனர். அதில், ஒரு மாணவி 6 ம் வகுப்பிற்காக, மாற்று பள்ளிக்கு சென்றுவிட்டார்.இதனால், இக்கல்வி ஆண்டில், நான்காம் வகுப்பில், பிரியா என்ற மாணவி மட்டுமே படித்து வருகிறார். இந்த, ஒரு மாணவிக்காக, பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தினமும் பள்ளியை திறந்து, கற்பித்து வருகிறார். மாணவர், சேர்க்கைக்காக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்தாலும், பயனில்லாத நிலையில், இங்கு ஒரு மாணவி மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பிரியாவின் பெற்றோரும், அம்மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற திட்டமிட்டனர். இதற்கு தலைமை ஆசிரியை முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா கூறுகையில்,"கடந்த ஆண்டு இரு மாணவிகள் படித்தனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பிழைப்பிற்காக வெளியூர் செல்கின்றனர். இதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. மாணவர் சேர்க்கைஅதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.மானாமதுரை தொடக்ககல்வி அலுவலர் நாகலட்சுமி கூறுகையில், "மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இங்குள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆசைப்படுவதால், வருகை குறைந்துவிட்டது,” என்றார்.

5 comments:

  1. ஆகா இந்த குழந்தையை எந்த மாதிரி வளர்த்து கொண்டுவரலாம்.

    ReplyDelete
  2. குழந்தையை அறிவுள்ளவனாக உருவாக்கும்போது தானாகவே பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள்

    ReplyDelete
  3. பிரேமா முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்காக மனசாட்சியுடன் வேலை செய்யவேண்டும்.

    ReplyDelete
  4. ஆகா இந்த குழந்தையை எந்த மாதிரி வளர்த்து கொண்டுவரலாம்.

    ReplyDelete
  5. ஆகா இந்த குழந்தையை எந்த மாதிரி வளர்த்து கொண்டுவரலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி