ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: இன்று துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2014

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: இன்று துவக்கம்.


தஞ்சாவூர் அன்னை சத்யாவிளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று துவங்கி வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.

முகாமிற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் சுப்பையன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க உள்ளனர்.இதற்காக, மைதானத்தில் கழிப்பறைகள், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முகாமில் பாதுகாப்புப் பணிகளை போலீசார் மேற்கொள்வர். இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன; அரங்கத்துக்கு வெளிப்பகுதியில்,தீத்தடுப்புச் சாதனங்கள் அமைக்கப்படும்.சுகாதாரத்துறை மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய குழுவுடன் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி