தமிழகத்தில் வசித்து வரும் கிறிஸ்துவர், முஸ்லீம், சீக்கியர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர்(பொறுப்பு) முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவர், முஸ்லீம், பார்சி, ஜெயின் மதத்தினர் மற்றும் புத்த மதத்தினரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசு அல்லது உதவி பெறும் கல்வி நிலையங்களில் பிளஸ்1, பிளஸ்2, ஐ.டி.ஐ, ஐ.டி.சி, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பில், ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவைகள் படிப்பதற்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கான விண்ணப்பங்களை(
அதையடுத்து,அக்.10ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கு சமர்பிக்க வேண்டும்.இதற்கான கல்வி உதவித் தொகை அந்தந்த மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட உள்ளதால், வங்கிக் கணக்கு எண் மற்றும் குறியீடு எண்ணையும் தவறாமல் சமர்பிக்கும் போது குறிப்பிட வேண்டும். கல்வி நிலையங்களில் ஆன் லைனில் மாணவ, மாணவிகளால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்க வேண்டும். உடனே அந்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், விண்ணப்ப படிவங்களில் கையொப்பம் இடப்பட்டு, அனைத்து சான்றுகளுடன் அக்.5ம் தேதிக்குள் புதிய பதிவிற்கும், அக்.31-ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் தவறாமல் சமர்பிக்க வேண்டும்.
எனவே சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையும்மாறு ஆட்சியர்(பொறுப்பு) முனுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி