கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2014

கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு.


கடலூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, உயர் தொடக்க நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், கடலூர் மற்றும் விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலைப் பள்ளிகள் 1,700 இயங்குகிறது.

இப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறன் குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இதனால், கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்வது என, முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 180 ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.10 பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் பயிற்றுனரும், கல்வியில் பின்தங்கிய பள்ளிகளுக்கு 3 முதல், 5 ஆசிரியர் பயிற்றுனர் வரை ஒரு குழுவாக நேரில் சென்றுஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று, வழக்கம் போல் திறக்கப்பட்டன.

ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழுவினர்இன்று (3ம் தேதி) முதல், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.ஆய்வின் போது, காலையில் பள்ளி துவங்கும் போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆசிரியர்கள் பணிக்கு வருகிறார்களா, அவர்கள் கற்பிக்கும் விதம், மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் ஆகியவை குறித்து கண்காணிக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கவும், ஆசிரியர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி குறித்து புத்தாக்கப் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு பள்ளிகளுக்கு தேவையானகட்டடம், கழிவறை,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலைப் பள்ளிகளில் கற்றல் அடைவுத் திறனை மேற்படுத்த ஆண்டுதோறும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்கு கடந்தாண்டு நல்ல பலன் கிடைத்தது. இந்தாண்டும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கற்றல் அடைவுத் திறன் குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை ஆய்வு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.

2 comments:

  1. I ASK ONE QUESTION LAST YEAR LA MATHS LA 1500 CANDIDATE KU (OC,BC,BCM,MBC,SC,SCA,ST) POSTING POTTANGA.
    MY DOUBT MBC KU 20% =300 POSTING
    PODANUM ORUVELAI 200 CANDIDATE THAN PASS PANNI IRUNTHANGANA BALANCE 100 CANDIDATE INTHA YEAR LA ADD PANNUVANGALA?
    ANY ONE REPLY ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி