பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று, மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று, மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம்.


கடந்த மாதம், 23ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.10.21 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதி இருந்தனர்.
இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்,இன்று, பள்ளிகளில் வினியோகிக்கப்படுகிறது.பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய மாணவர்கள், அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று, மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழை வாங்கியதும், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும், சரியாக இருக்கிறதா என்பதை, உறுதி செய்துகொள்ள வேண்டும். பெயர், பதிவு எண், பள்ளியின் பெயர், பாட வாரியாகபெற்ற மதிப்பெண் விவரம் உள்ளிட்ட, அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். பிழை இருந்தால்,உடனடியாக, பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் சான்றிதழில்ஏற்பட்ட பிழையை சரிசெய்து, புதிய மதிப்பெண் சான்றிதழ் தர, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுப்பார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி