100 ரூபாயில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்'!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2014

100 ரூபாயில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்'!!


பொதுச்சேவை மையங்களில், 100 ரூபாய் செலுத்தி, பாஸ்போர்ட்டுக்குவிண்ணப்பிக்கும் முறை, சென்னை பாஸ்போர்ட் மண்டல பகுதியில் அமல்படுத்தப்படுகிறது' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பாஸ்போர்ட் விண்ணப் பங்களை ஆன்--- - லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் தொடர்பான பிற விவரங்களை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் பெற, முன் அனுமதியையும்,ஆன் - லைனிலேயே பெற வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு, இம்முறை கூடுதல் சிரமங்களை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு உதவும் வகையில், பொது சேவை மையங்களில், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அளிப்பதை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதையடுத்து, சென்னை பாஸ்போர்ட் மண்டலத்துக்கு உட்பட்ட, தர்மபுரி, கிருஷ்ண கிரி, திருவண்ணாமலை, வேலுார் மாவட்ட மக்கள், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை, பொது சேவை மையங்களில் அனுப்ப, வசதி செய்யப்பட உள்ளது. பொது சேவை மையங்கள், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை கம்ப்யூட்டர் மூலம், பூர்த்தி செய்து அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.எனவே, பொது சேவை மையத்தில் முன் பதிவு செய்து, போட்டோ மற்றும் இதர ஆவணங்களைக் கொண்டு சென்றால், பொது சேவை மையங்களில் இருந்து, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல, தேதி மற்றும் நேரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கு, அதிகபட்சமாக, 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பொது சேவை மையங்களில் உள்ள பணியாளர்களுக்கு,பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி முடிந்ததும், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி, இம்மையங்களில் துவங்கப்படும்.இவ்வாறு, செந்தில் பாண்டியன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி