அரசாணை எண். 107 இன் படி பதவி உயர்வு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

அரசாணை எண். 107 இன் படி பதவி உயர்வு...


உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு 12ம் வகுப்பு கல்வித்தகுதியினை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அரசாணை எண். 107 எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
ஆனால் தொடக்கக்கல்வித்துறை இதனை அமல்படுத்த தொடர்ந்து மறுத்து வந்த சூழ்நிலையில் தொடக்கக்கல்வி துறையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து உடனடியாக அமல்படுத்தவேண்டுமென நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து பலர் இவ்வருடம் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

1. விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ஒன்றியம் - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. முத்து திருவள்ளுர் மாவட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2. அரியலூர் மாவட்டம் - ஆண்டிமடம் ஒன்றியம் - திரு. முருகேசன்
3. செயங்கொண்டம் ஒன்றியம் - திருமதி. முனியம்மாள்
4. கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் - திருமதி. சுகுணா
5. புதுக்கோட்டை மாவட்டம் - திருமதி. கலைச்செல்வி
6. திருப்பூர் மாவட்டம் - காங்கேயம் ஒன்றியம் - ரெஜினா தங்கம்
ஆகியோர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி