13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி.


தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 40-க்கும்மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 66 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும்,145-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் உள்ளன.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் தகுதிக்கு இணையான பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாவட்ட கல்வி அலுவலர் அளவிலான புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், மத்தியசென்னை உள்ளிட்ட 17 டி.இ.ஓ. பணியிடங்களும், திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 டி.இ.இ.ஓ. பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேபோல், 5-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். இந்தப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அதோடு, நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி