'மாணவர்கள், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ராமநாதபுரத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பள்ளி மாணவர்களில் சிலர், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணிப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று பயணிப்பவர்களை, பள்ளிநிர்வாகம் கண்டிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி