சட்டப் படிப்பிற்கான பொது கவுன்சிலிங் 7ம் தேதி துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2014

சட்டப் படிப்பிற்கான பொது கவுன்சிலிங் 7ம் தேதி துவக்கம்.


அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., சட்டப் படிப்பிற்கான பொது கவுன்சிலிங், 7ம் தேதி துவங்குகிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கீழ் தமிழகத்தில், ஏழு, அரசு சட்டக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., மற்றும் மூன்றாண்டு பி.எல்., சட்டப்படிப்புகள் உள்ளன.இதுதவிர, சட்ட பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., மற்றும் பி.காம்.பி.எல்.,ஹானர்ஸ் படிப்புகள் உள்ளன. சட்டப் பல்கலையில் உள்ள படிப்புகளுக்கான கவுன்சிலிங்முடிந்த நிலையில், சட்டக் கல்லுாரிகளில், பி.ஏ.பி.எல்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

தரவரிசை பட்டியலை, பல்கலையின்,www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மேலும், இப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, பொது கவுன்சிலிங், வரும் 7ம் தேதிமுதல் 10ம் தேதி வரை நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி