ஆகஸ்ட் 12: இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் பிறந்த தினம் இன்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

ஆகஸ்ட் 12: இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் பிறந்த தினம் இன்று

விக்ரம் சாராபாய் என்கிற பெயரை உச்சரிக்கிற பொழுதே பெருமிதம் கொள்ளவேண்டும் ஒவ்வொரு இளைஞனும்,இந்திய தேசத்தின் கனவுகளை கட்டமைத்த இளைஞர் கூட்டத்தில் அறிவியல் துறையில் மாபெரும் முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். இவரின் திருமணத்தின் பொழுது இவர் வீட்டில் இருந்து கலந்து கொள்ள யாருமே இல்லை -வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக போராடி எல்லாரும் சிறை சென்று இருந்தார்கள் ,கேம்ப்ரிட்ஜில் படித்து முடித்து விட்டு சி.வி.ராமனிடம் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்த இவர் தன் ஆய்வுகளை காஸ்மிக் கதிர்களை சார்ந்து செய்தார்.
நாட்டிற்கு அறிவியல் சார்ந்த பார்வை தேவை என நேரு வாதிட்ட பொழுது இந்திய விண்வெளி கழகத்தை அமைத்தார் சாராபாய் ;அதற்காக தாராள நிதியை அரசிடம் இருந்து வாதாடிப்பெற்றார். பல்வேறு கனவுத்திட்டங்களுக்கான விதைகளை ஊன்றி,இளைஞர்களை அறிவியல் துறைக்கு வர ஊக்குவித்தார். ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் மறைவுக்கு பின் இந்திய அணுசக்தி துறைக்கான பொறுப்பையும் ஏற்று செயல்பட்டார் .கல்பாக்கத்தில் Faster Breeder Test Reactor (FBTR),கொல்கத்தாவில் சைக்ளோட்ரான் திட்டம், இந்திய யூரேனிய கழகம் ஆகியவற்றையும் உருவாக்கி சாதித்தார். தும்பாவில் ராக்கெட் ஏவுதளமும் இவரால் உருவாக்கப்பட்டது

இன்றைக்கு உலகஅளவில் கவனம் பெறும் இந்திய மேலாண்மை மையங்களுள் முதன்மையான ஐ.ஐ.எம். அகமதாபாத் இவரின் உருவாக்கமே. விண்வெளிப்பயணங்கள் மாதிரியான விலை மிகுந்த பயணங்கள் இந்தியா மாதிரியான ஏழை நாட்டுக்கு தேவையா என்கிற கேள்விக்கு இப்படி பதில் சொன்னார் சாராபாய் :

"முன்னேற்றப்பாதையில் தற்போது தான் பயணிக்க ஆரம்பித்திருக்கிற ஒரு தேசத்துக்கு விண்வெளிப்பயணம் தேவையா என்று வினாக்கள் எழும்புகின்றன. இரு வேறு எண்ணங்கள் இல்லாமல் உறுதியாக நாங்கள் இந்த பயணத்தை முன்னெடுத்து இருக்கிறோம். நிலவை நோக்கியோ, கோள்களை கண்டறியவோ, மனிதர்களை விண்ணுக்கு கொண்டு செல்லும் பணக்கார நாடுகளோடு போட்டி போடுவதற்கான கனவுகள் இல்லை இவை ! பொறியியல் மற்றும் விஞ்ஞான நுணுக்கங்களை சராசரி மனிதனின் சிக்கலை தீர்ப்பதிலும் ,சமூக பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் தான் இந்த கனவு அமைப்பு. உலக சமூகத்துக்கு எந்த வகையிலும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேசத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு அர்த்தமுள்ள பணியே இது !"

ஐம்பத்தி இரண்டு வயதில் மறைந்து போன இந்த தீர்க்கதரிசியின் கனவுகளின் வெற்றிகள் தான் இன்றைக்கு இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தியில் பெற்று இருக்கும் இடம். அவரின் பிறந்த தினம் இன்று

9 comments:

  1. Wish u happy birth day to Mr sarabai

    ReplyDelete
  2. GOOD EVENING FRIENDS, HW R U ? IRANDAM LIST SECOND LIST-I ETHIRPARTHU

    ULLA EN INIYA NANBARGALAE., WE WILL PRAY TO COMING SOON WITH IN AUGUST 25-TH 2014 ., PARPPOM.,

    KANDIPPAGA LASTTIME ANNOUNCEMENT-IL VELIYITTULARGAL., EARGANAVAE

    VACANCY DETAILS EDUTHU ULLATHAGA KOORUGIRARGAL., PARPPOM.,

    ETHANAI MATHANGAL KATHIRUNTHOM., PARPPOM ., ONDUMAE PURIYAVILLAI.,

    TRB-IL IRUNTHU ITHANAI NATKALUKKUL WELFARE SCHOOLS, CORP., MUNICI. SCHOOLS LIST ORU ARIKKAI VITTAL EVVALOVU NANDAGA IRUKKUM.,

    EXPECTION-DU IRUPATHAE NAMAKKU VELAIYAGA POI VITTATHU.,

    DEAR 2ND LIST EXPECTED FRIENDS WAIT PANNUVOM.,

    DEAR MR. VIJAYAKUMAR CHENNAI SIR, UNGAL MARK ENNA ? NEENGAL SELECT

    AAGIVITTEERGALA., PLS. TAKE INITIATIVE TO GATHERING 2ND LIST UPDATION SIR.,

    WE R MORE EXPECTING ., UNGALAL MUDIYUM.,

    NEENGAL NERADIYAGA TRB-KKU SENDRU SARIYANA PATHILAI THARUNGAL SIR.,

    ANYBODY TAKE INITIATIVE TO RELEASING 2ND LIST NEWS., MR. MANI SIR., PLS. ENQUIRE THE 2 ND LIST NEWS.,

    SRI ONLY FOR U SIR, PLS TAKE INITIATIVE 2ND LIST NEWS IF U R FREE.,

    THANKING YOU.,

    ReplyDelete
  3. WE ARE WISHING THIRU. VIKRAM SARA BAI., THANKS FOR TIS ARTICLE

    MR. SRI ONLY FOR U SIR., SIR., PLS. ASK AND TAKE INITIATIVE TO 2ND LIST NEWS

    FROM TRB., WE R WAITING FOR UR REPLY., MANI SIR THANKS FOR 2ND LIST

    ARTICLE., VIJAYAKUMAR CHENNAI SIR, PLS. ASK AND INTIMATING THE 2ND LIST NEWS SIR., SRI ONLY FOR U SIR 2ND LIST PATRI KETTU SOLLUNGAL. SIR.,

    ReplyDelete
    Replies
    1. வேல்முருகன் நண்பரே.. நீங்கள் இதைப்பற்றி திரும்ப திரும்ப கேட்கவேண்டியது இல்லை இப்போதைக்கு உறுதியாக இரண்டாம் பட்டியல் வரும் என்று நம்புகிறோம்.. தேர்வு வாரியம் அறிவிக்கவில்லை ஆனால் நமக்கென்று தெரிந்த சில தகவல்கள் அடிப்படையில் இரண்டாம் பட்டியலுக்கு வாய்ப்புகள் அதிகம்.. அதுமட்டுமில்லாமல் trb இடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சில நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்..
      அதனால் கவலை வேண்டாம் நம்பிக்கையுடன் இருங்கள்...

      Delete
    2. நண்பர்களே நீங்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு இன்னும் சில நாட்களுக்கு சரியாக பதிலளிக்க முடியாது அதற்காக மன்னித்துவிடுங்கள்.... தவறாக நினைக்க வேண்டாம் எனது சூழ்நிலை அப்படி...

      Delete
    3. What is the procedure followed during counselling..... Will it be district wise or state wide counselling.... any priority in marks or alphabetical order or caste wise ,,,pls explain sir

      Delete
    4. முதலில் மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடக்கும்.. அதில் கிடைக்காத நபர்களுக்கு பிறகு மாவட்ட அளவில் நடைபெறும்...

      Delete
    5. thanks sri.....but sir will they be called in the district according to caste or marks or priority ???

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி