பெண் பணியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியிட மாற்றம் : அரசுபரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

பெண் பணியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியிட மாற்றம் : அரசுபரிந்துரை


நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கி களில் பணியாற்றும் பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு தக்க வாறு பணியிட மாறு தல் பெறுவதற்கு ஆவனசெய்ய வேண்டுமென அனைத்து வங்கிகளுக் கும் மத்திய நிதி அமைச் சகம் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது.

சமீபத்தில் உருவாக் கப்பட்ட தேசிய மகளிர் வங்கி உள்ளிட்ட 27 பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமாக நாடுமுழுவதிலும் லட்சக்கணக்கான கிளை வங்கி கள் உள்ளன.இவற்றில் சுமார் 2.5 லட்சம் பெண் பணி யாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.திடீர்இடமாற்ற உத்தரவை யடுத்து, பெற்றோர் வசிக் கும் இடத்தை விட்டு பிரிந்து தொலைதூர பகுதிகளுக்கு மாற்ற லாகி செல்லும் திருமணமாகாத பெண் பணி யாளர்கள், தாங்கள் பாதுகாப்பற்ற சூழலில்இருப்பதாக உணர்கின் றனர்.இதேபோல், திருமணமாகி கணவன், குழந்தை களுடன் வாழ்ந்துவரும் பெண் பணியாளர்கள், குடும்பத்தினரைப் பிரிந்துவேறு மாநிலங்களுக் கோ, வேறு மாவட்டங் களுக்கோ பணியிட மாற்றம் பெற்று செல்லும் போது, மன உளைச்சலுக்கு ஆளாக நேர்கின்றது.இவற்றை கருத்தில் கொண்டு, வங்கிகளில் பணியாற்றும் பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு தக்கவாறு பணியிட மாறுதல் பெறுவதற்கு ஏற்றவாறு ஒரு புதிய பணியிட மாற்றக் கொள்கையை வரை யறுக்குமாறு அனைத்து பொதுத்துறை வங்கி களின் தலைமைக்கும் அறிவுறுத்தி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ்இயங்கி வரும் நிதிச்சேவைத் துறை சுற்றறிக் கை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி