‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.


கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியில் (அறிவியல்பாடங்கள்) சேருவதற்கான “நெட்” தகுதித்தேர்வை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் ஐஆர்) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது.

இந்த ஆண்டுக் கான 2-வது நெட் தேர்வு டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 23-ம்தேதி வரையும், தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 22-ம் தேதி வரையும், ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அனுப்பு வதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 29-ம்தேதி வரையும் நீட்டிக்கப்படுவதாக சிஎஸ்ஐஆர் “நெட்” தேர்வு பிரிவு முதுநிலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நரேஷ் பால் அறிவித் துள்ளார். சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வை முது கலை அறிவியல், கணித பட்டதாரிகள் எழுதலாம். இந் தேர்வுக்குwww.csirhrdg.res.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி