தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி முதுநிலை பட்டதாரிகள் டிஆர்பியில் முற்றுகை - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி முதுநிலை பட்டதாரிகள் டிஆர்பியில் முற்றுகை - தினகரன்


அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் 2013 ஜூலை 21ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக நடந்த வழக்கின் தீர்ப்பின்படி 2014 ஜனவரி 17ம் தேதி திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரி பார்ப்பு நடத்தப்பட்டது.

அதன்படி தற்காலிக தெரிவுப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் விலங்கியல், புவியியல், மனையியல், விளையாட்டு ஆசிரியர் கிரேடு&1, உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது. மற்ற பாடங்களுக்கான பட்டியல்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து, முதுநிலை பட்டதாரிகள் தெரிவுப் பட்டியலை வெளியிட கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 60க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்தித்து பேச ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, முதுநிலை பட்டதாரிகள் போட்டித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக்கிளை ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக் கின் முடிவுகள் சில வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இறுதித் தீர்ப்பு வெளியானதும் மற்ற பாடங்களுக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்படும். வரும் 14ம் தேதி திருத்திய பட்டியல் ஒன்று வெளியிட உள்ளோம். அப்போது வெளியாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.

29 comments:

  1. தமிழ் ஆசிரியர்களின் கவனத்திற்க்கு


    தமிழ் ,ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வரலாறு, புவியியல் என மொத்தம் ஒன்பது பிரிவுகள் உண்டு இதில் இரண்டாவதாக அதிக அளவு தேர்ச்சி (9851) தமிழ்த்துறைக்கு ஒதுக்கபட்ட காலிபணியிடங்கள் மிக மிக குறைவு 772

    அதே போல் கணிதத்திற்க்கும் மிக குறைவான காலிபணியிடங்கள் 912+82:994 மொத்த தேர்ச்சி 9074

    தமிழ் மற்றும் கணிததுறை நண்பர்கள் இனைந்து இனிமேல் வரப்போகும் கூடுதல் பணியிடங்களில் தமிழ் மற்றும் கணிததுறைக்கு அதிக அளவு ஒதுக்க போராடுவோம் மற்ற துறை காலிபணியிடங்களில் எடுத்து நமக்கு ஒதுக்க வேண்டாம் நமக்கு உரிய பணியிடங்களை மறைக்காமல் வெளியிட போராடுவோம் மேலும் சில தகவல்களுக்கு

    சதீஸ் குமார் 8760561190

    பிரகாஸ் 9787374420

    ReplyDelete
  2. "BRAMANDA MEDAI"

    ON SEPTEMBER 05.

    ReplyDelete
    Replies
    1. விஜய் விஜய்........
      உறுதியான தகவல்...........இதுவா???????????
      வாழ்க்ககை ஒன்னும் விளையாட்டு அல்ல.............

      Delete
    2. Vijay vijay sir ellame vedikkai than namakku nadakkadhavarai....

      Delete
    3. yellaam therinja maathiri solradhu ungakitta yippa yaaraavadhu keytaangalaa??

      Delete
  3. hey vijay ! do not spread rumor because many candidates are mentally fix for that date any how next month they never possible to give posting understood

    ReplyDelete
  4. Vivek H, at least govt will appoint us before M.L.A Election. If that happens also, I would be happy.

    ReplyDelete
  5. Edhadhu yaradhu sonna rumarna yar tha share panvanga.adhala avangaluku enna agapogudhu. Avanga engayadhu ketu solvanga.cm key therhuma therla.then enaku en friend ipditha sonanga.sep 5 vizha..7 join datenramari.bt i am nt 100&%sure.

    ReplyDelete
  6. Notification has been issued by TRB to appoint teachers only. Not for playing with us. Legal suit is real reason behind this problem. Nothing else.....

    ReplyDelete
  7. Don't believe such sort of false news...

    ReplyDelete
  8. paper 1 pls contact 9788855419

    ReplyDelete
  9. paper 1 eluthunavanga ennappa panreenga unkalukku job venama?

    ReplyDelete
  10. முதுகலை ஆசிரியர்க்களுக்கான இறுதி பட்டியலின் தாமதத்திற்கு காரணம் வழக்ககுகள் அல்ல அப்படியனில் தமிழாசிரியர் நியமிக்கபட்டிருக்க முடியாது... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடன் சேர்த்து பணிநியமன விழா நடத்த திட்டம் உள்ளதாக தெரிகிறது ஆனால் அதனால் ஏற்படும் கால தாமதம் மிகுந்த மனவேதனை தருகிறது விரைவில் இதற்கு ஒரு முடிவுகான அரசிடம் வேண்டுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. Apa pg trb ku cases innum irukka????? Ella caseum mudinthuvittathaga kurinargal?????

      Delete
    2. Case problem illa friend. Namakku sambalam kudukkanumla adhaan problem

      Delete
  11. ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

    நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே
    இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும்
    பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .

    இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம்
    அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.

    ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார்
    திரு.ஆபிரகாம் லிங்கம்.

    மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

    என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும்
    உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும்
    இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று,
    அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,

    ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு
    கற்றுக் கொடுங்கள்.

    அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத்
    தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற
    ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


    தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
    பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள்.
    எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

    புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து
    காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக்
    கற்றுக் கொடுங்கள்.

    ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில்
    அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும்,
    முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப்
    பயிற்சி கொடுங்கள்.

    கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும்
    தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர்
    விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால்
    எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

    தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும்
    உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும்
    விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

    இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை
    எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.

    அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.

    இப்படிக்கு,
    ஆபிரகாம் லிங்கம்.

    ReplyDelete
  12. Dear 90 Marks above Candidates This is very important,
    Varukira FRIDAY (08.08.2014) Andru Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
    20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

    Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
    Cantact-9943374909

    ReplyDelete
  13. Dear 90 Marks above Candidates This is very important,
    Varukira FRIDAY (08.08.2014) Andru Kaalai 10.00AM kku Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
    20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

    Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
    Cantact-9943374909

    ReplyDelete
  14. PAPER 1 ENKAPPA PONEENKA..........

    ReplyDelete
  15. Pongaya neengalum unga postingum, sariyaana pulugu moottaigal

    ReplyDelete
  16. இருதிபட்டியலில் கருப்பு ஆடுகள்

    இருக்க வாய்ப்பு irukumo ???

    ReplyDelete
    Replies
    1. vijay sir .kandippaaka 100% irukaadhu. irukkum entru neenkal nambinaal RIA oru pettion pottu trb il keetu paarungal.

      Delete
  17. Inke oru maathathku munpu yaaro oru aarvakolaru, ellam therintha yekaambaram,"Annaithu valakku kalum mudintha thaka" (PG,TET1,TET2 ) blog eluthinaare. Enna aachu?!.Yaanaiyin uruvam peridhu TRB in mouna rakasi yamum athupolath than. so.kurudarkal yaanayai thadavi paarthu uruvam sonnadhu pola .therin tha cinna seitiyai vaith dhu eluthaathir kal .

    ReplyDelete
  18. அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  19. Above article should be correct. At least this week we should receive the final list.

    ReplyDelete
  20. Sathiya R என்ற பெயரில் வரும் தகவல்களை நம்பாதிர்கள் எதும் இலவசம் இல்லை நான் பரிசோதித்தேன் வேண்டாம் இந்த வில்லங்கம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி