தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
புதிய வாக்காளர் (2015) பட்டியல் தயாரிப் பது குறித்தும், தற்போதுள்ள பட்டியலை சரிபார்ப்பது குறித்தும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தேர்தல் வட்டாட்சியர்கள் மற்றும் மாவட்டத்துக்கு ஒரு மாஸ்டர் பயிற்சியாளர்கள் என மொத்தம் 64 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து செப்டம் பர் 16, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரி களுக்கான பயிற்சி முகாம் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: 2015ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகத்தில், வருகிற அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன்18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.அதேபோன்று, இதுவரை வாக்காளர் பட்டிய லில் பெயர் இல்லாதவர்கள், முகவரி மாற்றம், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். 2015ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும்.
புதிய வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், கடந்த மே மாதம் சுமார் 12 லட்சம் பேர் புதிய வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண அடையாள அட்டை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். கறுப்பு, வெள்ளையுடன் தற்போது இருக்கும் அடையாள அட்டைக்கு பதில் வண்ண அட்டை கொடுக்கும் திட்டம் இப்போது இல்லை. பின்னர் இதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???
ReplyDelete