பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது: அதிகாரிகள் கண்காணிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது: அதிகாரிகள் கண்காணிப்பு


பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் நேற்றுதொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு 19ம் தேதி தொடங்க உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் தொடர்பான கால அட்டவணை கடந்த மாதம் வெளியானது. அதன்படி, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் 15ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு17ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல்கள் நடப்பதை அடுத்து 17, 18ம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் அக்டோபர் 7, 8ம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று தொடங்கின. பத்தாம் வகுப்புக்கான தேர்வு 19ம் தேதி தொடங்கும். அதேபோல மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் 19ம் தேதி தொடங்கும்.

நேற்று தொடங்கிய பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகளில் குழப்பம் ஏதும் ஏற்படாமல் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோர் தலைமையில் இணை இயக்குநர்கள் கொண்டஅதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி