தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு இரண்டு கட்ட மாக கலந்தாய்வு முடிந்து, இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
சுயநிதி கல்லுாரிகளில் ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.
இந்த இடங்கள், சேர்க்கையில் மீதமுள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, நாளை (செப்., 30) சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நடக்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை கலந்தாய்வு நடக்கும். எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற விவரங்களை செப்டம்பர் 29ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.யார் யார் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்பது போன்ற விவரங்களை, www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி