'டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வு முதல் நாள் 420 பேருக்கு இடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

'டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வு முதல் நாள் 420 பேருக்கு இடம்

தமிழகத்தில், 'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வின், முதல் நாளில், 420 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.தமிழகத்தில், 23 நர்சிங் கல்லூரிகளில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கு, 2,000 இடங்கள் உள்ளன;
8,101 பேர் போட்டியில் உள்ளனர். இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், நேற்று தொடங்கியது.
காலை, சிறப்பு பிரிவினருக்கும், மதியம், மற்ற பிரிவினருக்கும் கலந்தாய்வு நடந்தது. அழைக்கப்பட்ட, 580 பேரில், 500 பேர் வரை பங்கேற்றனர்.மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவில், மொத்தம், 48 பேர் ஒதுக்கீடு பெற்றனர். முதல் நாள் கலந்தாய்வு முடிவில், மொத்தம், 420 பேர் ஒதுக்கீடு பெற்றனர்.மீதம், 1,580 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம், 18ம் தேதி வரை நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி