அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில், வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு, பொதுத்தேர்வுகளில், மாநில அளவில், அதிக இடங்களை பிடித்த, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், வாசிப்புத் திறன் மிக குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.எஸ்.எஸ்.ஏ., சார்பில், பல வகையான ஆய்வுகள், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாசிப்புத் திறன் குறித்து, கடந்த ஆண்டு,ஆய்வு நடத்தப்பட்டது.கல்வித் துறை இணை இயக்குனர்கள் குழு, மாவட்ட வாரியாக சென்று, தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, மாணவர்களிடம் கொடுத்து, வாசிக்கச் செய்தது. அதில், பெரு நகரங்களில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், வாசிக்கத் திணறி உள்ளனர்.இந்த ஆண்டு, பொதுத்தேர்வில், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மாணவர்கள் தான், மாநில அளவில், அதிக மதிப்பெண்களை பெற்று, 'ரேங்க்' பெற்றனர். இந்த மாவட்ட மாணவர்கள் தான், வாசிப்புத் திறனில், மிகவும்பின் தங்கியிருப்பதாக, ஆய்வில் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.ஆய்வு முடிவின் அடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
இதுகுறித்து, துறை வட்டாரம் கூறியதாவது:
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, ஒரு சுற்றறிக்கையை, இயக்குனர் அனுப்பி உள்ளார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், முறையாக, அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மாணவர்களை, பாடப் புத்தகங்களை வாசிக்கச் செய்து, அவர்களின் திறனை அறிய வேண்டும்.பாடப்புத்தகங்களை வாசிக்க, மாணவர்கள் திணறி னால், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரிடம், விளக்கம் கேட்டு பெற வேண்டும் எனவும், இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது.
பிரச்னைக்கு அரசு தான் காரணம்!
மாணவரிடையே, வாசிப்புத் திறன்குறைவாக இருப்பதற்கு, ஆசிரியர், சரியாகபாடம் நடத்தாதது தான் காரணம் என, அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால், இதுகுறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை, ''பிரச்னைக்கு, அரசு தான் காரணம்,'' என, குற்றம் சாட்டுகிறார்.
அவர் கூறியதாவது:
*.தொடக்கக் கல்வித் துறை கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆயிரம் பள்ளிகள், இரு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளாக உள்ளன; இது,உண்மை. இரு ஆசிரியரில், ஒரு ஆசிரியர், பணியிடமாறுதல் பெற்றுச் சென்றால், அந்த பணியிடத்தை,உடனடியாக நிரப்புவது இல்லை.
*.இருவரில், ஒருவர் விடுமுறை எடுத்தாலும், ஒரு ஆசிரியர் தான் இருப்பார். ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தது, 20 மாணவர்களாவது இருப்பர். இவ்வளவு பேருக்கும், ஐந்து பாடங்களை, ஒரே ஆசிரியர் எப்படி எடுக்க முடியும்?
*.இரு ஆசிரியர் பள்ளியாக இருந்தாலும், ஐந்து பாடங்களை நடத்த வேண்டி உள்ளது.
*.ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 3,800 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஆனால், 1,650 ஆசிரியர் பணியிடம் மட்டும், தற்போது நிரப்பப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள், இரு ஆசிரியர் பள்ளிகளுக்கு வழங்கவில்லை.
*.இது போன்ற நிலை இருந்தால், மாணவர்களுக்கு, வாசிப்பு பிரச்னை; எழுதுவதில் பிரச்னை என, பல பிரச்னைகள் வரும்.இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.
காலை வணக்கம்
ReplyDeleteநண்பர்களே
இன்னும் 10 நாட்கள் தானே
1 வருடம் பொருத்த நமக்கு
இது கடினமல்ல்ல.
கடுமையாக இறைவனிடம் வேண்டுவோம்,
பொருத்ததார் பூமி ஆள்வார்.
@@@@@@@@@@@@@@
Deleteகூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
@@@@@@ௐ@@@@@@@
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:
நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதிற்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
விழுமின்;
எழுமின்;
உழைமின் ;
கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.
என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.
வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..
குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.
குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.
*********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************
10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
******************************
தொடர்புக்கு
sathyamoorthy(Avinashi)
95433 91234
9597239898
Sathyajith (Bangalore)
09663091690
Mahendran (chennai)
7299053549.
Ravi (kadalur)
8675567007
Dharmaraj (Ramnad)
9843521163
Kanagaraj (Theni)
9597734532
Karuppusamy
7200670046
sivadeepan (trichy)
8012482604
Sakthivel (dharmapuri)
9094316566
Kulanthaivel (kallakuruchi)
9994282858
Deva (vellur)
9566203861
Saravanan(vathalagundu)
9003444100
Ashok (chennai)
####################
Date :21/09/14
Place : chennai merina.
******************************
Thanks to all.
******************************
Yes
ReplyDelete