10, 12ம் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ரூ.92 ஆயிரம் ஊக்கத்தொகை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2014

10, 12ம் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ரூ.92 ஆயிரம் ஊக்கத்தொகை.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு ஆட்சியர் வி.கே. சண்முகம் ரூ. 92 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதித்தபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.அதன்படி பிற்படுத்தப்பட்ட 12-ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. ஆயிரம்வழங்கப்பட்டது. 10-ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2, ஆயிரம், ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 31 மாணவர்களுக்கு ரூ. 92 ஆயிரம் ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் டி.செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்ப. விஜயாம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி