டிச., 21ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2014

டிச., 21ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

தமிழக அரசில் 4963 பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4
தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளநிலை உதவியாளர் பணியிடங்கள் (2173), பில்கலெக்டர்(22), டைப்பிஸ்ட் (1683), ஸ்டெனோ டைப்பிஸ்ட் (331) களஆய்வாளர்(702), வரைவாளர் (53)

பணிகளுக்கு இத்தேர்வு வரும் டிச., 21ல் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும். இதில் பங்கேற்க நவ.,12 வரை விண்ணப்பிக்கலாம். 'ஆன்லைன்' மூலம் (www.tnpsc.gov.inமற்றும் www.tnpsc exams.net) மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு அடிப்படை சம்பளம் 5200 ரூபாய் வழங்கப்படும். தரச்சம்பளமாக ஸ்டெனோ டைப்பிஸ்டுகளுக்க ரூ.2800ம், மற்றவர்களுக்கு ரூ.2400ம் வழங்கப்படும். கல்வித் தகுதி 10ம் வகுப்பு. எஸ்.சி., எஸ்.டி., தரப்பினர் 35 வயது வரையும், பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவினர் 32 வயது வரையும், மற்றவர்கள் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.,க்களில் சர்வேயர் மற்றும் வரைவாளர் பயிற்சி பெற்றவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி