உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்த ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2014

உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்த ஆலோசனை

கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா, தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், உயர் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் பழனியப்பன் அளித்த பேட்டி:

உயர் கல்வித் துறையில் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது, பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 53 புதிய கல்லூரிகளில், இதுவரை 40 கல்லூரிகளுக்குக் கட்டடங்கள், பிற உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

மீதமுள்ள 13 கல்லூரிகளுக்கு கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகளை விரைவாக மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இதுபோல், தற்போது காலியாக உள்ள 1,613 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள், பாலிடெக்னிக்குகளில் உள்ள 613 காலிப் பணியிடங்கள், பொறியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் பணியை விரைவு படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

விரைவில் இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிடும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி