செல்ஃபோன் எண்ணை மாற்றாமல் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சேவை: மார்ச் 31ஆம் தேதிக்குள் அறிமுகமாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2014

செல்ஃபோன் எண்ணை மாற்றாமல் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சேவை: மார்ச் 31ஆம் தேதிக்குள் அறிமுகமாகிறது.


செல்ஃபோன் எண்ணை மாற்றாமல், நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சேவை அளிக்கும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி மார்ச் 31ம் தேதிக்குள் அறிமுகமாக உள்ளது.

டெல்லியில் தொலைதொடர்புத் துறை வட்டாரங்கள் இதைத் தெரிவித்துள்ளன. அந்தந்த மண்டலங்களுக்குள் செல்ஃபோன் எண்ணை மாற்றாமல் நிறுவனம் மாறும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது.

மாநிலம் விட்டு மாநிலம் இடம் மாறினாலும், வேறு தொலைத் தொடர்பு மண்டலத்துக்கு சென்றாலும் இந்த வசதியைப் பெற முடியாத நிலை இருக்கிறது.இதற்கு மாறாக, நாடு முழுவதும் செல்ஃபோன் எண்ணை இழக்காமல் நிறுவனத்தை மாற்றும் வசதி மார்ச் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி