ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.


சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதே வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோக்கூர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தும், ஜாமின் கோரியும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை 4 பேரும் அணுகியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி