பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்பாட்டத்தில்ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்.
ஆரம்ப கல்வி முதல், ஆராய்ச்சி கல்வி வரை, கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும். கல்வி கடன்களையும், கல்வி உதவி தொகையையும் தாமதமின்றி வழங்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் பொது சுகாதார கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு, மாணவர் பெருமன்றத்தின் மாநில துணை செயலாளர் அருள்ராஜன் தலைமை வகித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி