அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்ற முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2014

அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்ற முடிவு.


தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரை வில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக கோவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் கள் மாதிரிமையங்களாக மத்திய அரசால் தேர்வுசெய்யப் பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் அரசு வேலை வேண்டி வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவுசெய்வது வழக்கம், பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், முதுகலை பட்டம் மற்றும் மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வித் தகுதிகளை மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புவேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சென்னை, மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள் ளவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டிவிட்டது. வேலைக்கு வழிகாட்டும் மையம் ஆகிறது அரசுப் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படும்போது, ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் பதிவுதாரர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பரிந்துரை செய்யும். அதிலிருந்து தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வுசெய்யப்படுவர். இந்த நிலையில், வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பணியை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்பு திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நாடு முழுவதும் விரைவில் செயல்படுத்த உள்ளது. இதைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைக்கான வழிகாட்டி மையங்களாக மாற்றப்படும்.

மாதிரி மையங்கள் இந்தமையங்களில் பதிவுதாரர் களின் திறமை, ஆர்வம், மனோபாவம் ஆகியவை கண்டறியப்பட்டு அதற்கேற்ற படிப்பை படிக்கவோ, தொழில் பயிற்சியை பெறவோஉளவியல் ரீதியாக கல்வி ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக, தனியார் நிறுவனங்களைப் போன்று உளவியல் பரிசோதனை (சைக்கோமெட்ரிக் டெஸ்ட்) திறனாய்வு சோதனை (ஆப்டிடியூடு டெஸ்ட்) போன்ற பரிசோதனைகளை நடத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற வேலைவாய்ப்பு அதிகாரிகள், பதிவுதாரர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவார்கள். தேசியவேலை வழிகாட்டி பணி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாதிரி மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. சிறப்புப் பயிற்சி முடித்து திரும்பிய அதிகாரிகள் இதற்காக அந்த மாவட்டங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பு அதிகாரிகள் ஹைதராபாத்தில் முதல்கட்ட சிறப்பு பயிற்சியை முடித்துவந்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி