பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2014

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு


'நடுநிலைப்பள்ளிகளுக்கு, பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கக் கூடாது; பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் இடையே கோரிக்கை வலுத்துள்ளது.
தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.

இப்பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக, 49 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.துவக்கத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது வழக்கமாக இருந்தது; சில ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி நியமனம் மூலமாகவும், பதவி உயர்வு மூலமாகவும் பட்டதாரிஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களும், சிறப்பு ஆசிரியர்களும் பட்டப்படிப்பு, பி.எட்., கல்வித்தகுதி பெறும்போது பட்டதாரிஆசிரியர்களாக, பதவி உயர்வு பெறுகின்றனர்.

நடுநிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியரை நேரடியாக நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. பதவி உயர்வு வாயிலாக மட்டுமே, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறும் வாய்ப்புள்ளது; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களை, நடுநிலை பள்ளிகளுக்கு நியமிக்கக்கூடாது; அவர்களை, உயர்நிலைப்பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும், என இச்சங்களின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'இடைநிலை ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வாயிலாக மட்டுமே, பட்டதாரி ஆசிரியராக தகுதி பெற வாய்ப்புள்ளது. காலி இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமித்தால், இடைநிலை ஆசிரியர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது. நிறைய இடங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அந்த இடங்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து, பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பளிக்குமாறு, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி