மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.மீனாகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகளோ அல்லது அவரின் 70 வயது வரையோ பதவி வகிப்பார். இதில் எது முன்பு வருகிறதோ, அதுவே கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் டி.மீனாகுமாரி. அதற்கு முன்பு, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், பாட்னா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் அவர் இருந்துள்ளார். தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், மனித உரிமை ஆணையத் தலைவரை நியமிக்கும்படி கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுரைத்தது. அதன்படி தற்போது மீனாகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
Congrats to president of Human Rights
ReplyDeleteU r most welcome to the president of tamilnadu human rights commission
ReplyDeleteCONGRATS MAM ! WELCOMES TO THRC, WE HOPE SO MANY PROBLEMS TO BE SOLVED BY YOUR PROCESS. WARM WELCOMES TO YOU.
ReplyDelete