அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் வினாத்தாள்: அவசரகதியில் வகுப்பை முடிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2014

அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் வினாத்தாள்: அவசரகதியில் வகுப்பை முடிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்


வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கும் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்,பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மாணவருக்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்பதால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவசரகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

அறிவுறுத்தல்:

பள்ளிக் கல்வித்துறை சார்பில், கடந்த, சில ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வை நடத்துவது போல, ஒரே தேதியில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான, தேர்வு அட்டவணையை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, கல்வித் துறை அறிவுறுத்தி வருகிறது.மேலும், ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைத்தேர்வு, திருப்பத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு, அலகு தேர்வு ஆகியவற்றை அரசுப் பள்ளிகள் போலவே, தனியார் பள்ளிகளும் கட்டாயம் நடத்த வேண்டும். அதற்காக, தனியார் பள்ளிகளிடம் இருந்து, வினாத்தாள் மற்றும் மதிப் பெண் தகுதி சான்று ஆகிய வற்றிற்காக, ஒவ்வொரு மாணவனிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

10ம் தேதிக்குள்...:

ஆனால், சில, தனியார் பள்ளிகள், கல்வித்துறை வழங்கும் கால அட்டவனைப்படி தேர்வை நடத்தாமல், அவர்களுக்கு என தனியாக வினாத்தாள் தயாரித்து, தேர்வுக்கு மாணவரை தயார்படுத்தி வருகின்றன.இந்நிலையில், பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கி, 23ம் தேதி முடிகிறது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு, வரும், டிசம்பர், 12ம் தேதி துவங்கி, 23ம் தேதி முடிகிறது.இதில், அரையாண்டு தேர்வு வினாத்தாள், பிளஸ் 2 மாணவருக்கு, அவருக்கான முழு பாடத்திட்டத்தில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, 90 சதவீதம் பாடங்களில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்படும். அதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை, டிசம்பர், 10ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.ஆனால், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியாமல், அரையாண்டுதேர்வுக்காக அவசரகதியில், பாடங்களை வகுப்பில் எடுத்து வருகின்றனர். இதனால். பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பாடங்களை முழுமையாக கற்க முடியாமல், வரும், மார்ச்சில் துவங்கும் பொதுத்தேர்வுக்கான தேர்வு பயத்தில் உள்ளனர்.

கட்டாயம்:

கல்வி அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், தற்போதைய நிலையில்,பிளஸ் 2 மாணவருக்கு பாடம் நடத்த, 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ரெகுலர் வகுப்பு எடுக்கும் முதுகலை ஆசிரியர், கூடுதல் பொறுப்பாக அருகில் உள்ள பள்ளிக்கு வகுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால், இரண்டு பள்ளி மாணவரையும், முழு தேர்ச்சி அடைய வைக்க முடியவில்லை. அரையாண்டு தேர்வில், முழு பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்பதால், குறித்த நேரத்தில் பாடத்திட்டத்தை முடிக்கவில்லை.

தயார்படுத்த...:

சில, பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் பணியாற்றாததால், முழு பாடத்திட்டத்தை முடிக்கவில்லை. இதனால், அவரசகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பது போல், மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடமும் இருக்க வேண்டும். அப்போதுதான், அரசுப்பள்ளி மாணவரை, தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக தயார்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

16 comments:

  1. TAMILNADU IAS ACADEMY PG TRB HISTORY BEST COACHING CENTRE YOU ARE NOT SELECTED TRB YOUR MONEY RETURN. 9600610002

    ReplyDelete
  2. Friends,
    I joined as BT Assistant in Science, recently. I would like to get the GO for additional incentive for M.Phil., Degree.

    If you have the soft copy, please forward it to me.

    valga valamudan
    C.Manohar

    ReplyDelete
  3. ellorukkum vanakkum,
    i want to marry ,
    so any one have this idea please call me 7639332353

    ReplyDelete
  4. i am not joking, intha kalviseithi blog than ennoda job kum usefull irunthuchu, en life kum nalla oru partner kidaipanga nu nambaren

    ReplyDelete
  5. Mr.athi one person has said that i got counselling date by register post from adw dept.how is possible sir? is this real or fake news? When will pulish adw list? Awaiting ur vauble comment.

    ReplyDelete
  6. 12-11-2014 ;புதன் கிழமை கலந்தாய்வு என்று எனது சென்னை நண்பருக்கும் 7ம் தேதி கடிதம் வந்துள்ளது
    டிஆர்பி யை தொடர்பு கொள்ள முடியவில்லை
    வௌிப்படையான அதிகார்வபூர்வமான அறிவிப்பு இதுவரை இல்லை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. Dear aathi what about Sudala Mani Case .if you know these please tell abt tht.

      Delete
  7. கலந்தாய்வு கடிதம் ஆன்லைன் மூலமாகவே இதுவரை நடைபெற்ற பணிநியமங்களுக்கு வழங்கப்பட்டது
    முறையான அறிவிப்பின் படிதான் எல்லாம் நடந்து வருகிறது
    டிஆர்பி வலைதளத்திலிருந்து பட்டியல் நீக்கப்பட்ட நிலையில் ,இவை வீண் சர்ச்சையை ஏற்படுத்ததுகின்றன

    ReplyDelete
    Replies
    1. Mr.aathi thanking u sir,what happens in trb.one side selection list is removed in trb web site at the same time they has been sent counselling date.all are more confused including me. Why do they as it? How can know as selectin person who got counselling letter?

      Delete
  8. Without intimidation why trb removed list. OR after removal may intimate. But we sure they doing something. Anyway dear trb official do fast, we are eagerly waiting please...........

    ReplyDelete
  9. BT adw list process is over and the same was sent welfare dept on 23.10.2014. As the process is over, I assume the list was removed.

    ReplyDelete
  10. Good morning friends! What happened to BC,MBC welfare schools selection list?

    ReplyDelete
  11. Hai aathi sir

    Antha bc,mbc letters forward counselling pannamudiuma l sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி