பாடப் புத்தகங்கள் மாயம்: கல்வி அலுவலக பணியாளர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2014

பாடப் புத்தகங்கள் மாயம்: கல்வி அலுவலக பணியாளர் கைது

கோவையில் அரசு பாடப் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்த சரவணகுமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

சமச்சீர் கல்வி திட்டத்தில் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத கோவை மாவட்டத்துக்குரிய 350 டன் பாடப் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் இருப்பு வைக்கப்பட்ட புத்தகங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டபோது, கோவையில் இருப்பு வைக்கப்பட்ட 350 டன் பாடப் புத்தகங்களும் மாயமான தகவல் வெளிவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சரவணகுமார் செவ்வாய்க்கிழமை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் முன்னிலையில் ஆஜரானார். விசாரணையில் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் அவருக்கு நேரடி தொடர்பிருப்பது உறுதியானது. இதையடுத்து போலீஸார், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி