சாதிக்க வேண்டுமா உங்கள் குழந்தைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2014

சாதிக்க வேண்டுமா உங்கள் குழந்தைகள்!




உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பில்கேட்ஸ் போல, அம்பானிகளைப் போல சாதிக்க வேண்டுமென நினைக்கிறீர்கள். அதைச் செயல்படுத்த வேண்டுமானால் என்ன செய்வது? இளமை முதலே குழந்தை களுக்கு தரப்படும் பயிற்சியே எதிர் காலத்தில் அவர்களை ஜெயிக்க வைக்கும்.
சுவாமி சிவானந்தர் இது பற்றி சொல்லும் போது, “உங்கள் பாக்கெட்டில் எப்போதும் ஒரு குறிப்பு புத்தகத்தோடு ஒரு பென்சிலையும் வைத்திருங்கள். சுறுசுறுப்பான நபர்களும் அதிசய மனிதராகத் திகழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களும், நடந்து கொண்டிருந்தாலும் சரி, வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தாலும் சரி... ஒரு உயரியஎண்ணம் தோன்றிய அந்த நிமிடத்திலேயே அதே இடத்தில் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் சுருக்கெழுத்தில் அல்லது அவரவருக்கு புரியும் வகையில் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த குறிப்புகளை உங்கள் நிரந்தர டைரியில் விரித்து எழுதிக் கொள்ள வேண்டும். இதுவே வெற்றியின் ரகசியம். வெறும் ஏட்டுப்படிப்பு மனிதனுக்கு உதவாது,” என்றார்.உங்கள் ஊருக்குள்ளேயே பல விஷயங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது. உதாரணமாக, உங்கள் ஊரின் மக்கள் தொகை என்னவென்று கேட்டால், எத்தனை பேர் உருப்படியாக பதில்சொல்வார்கள்? எனவே வெளியில் செல்லும் போது, உங்கள் கண், காதுகளை கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில்உள்ள போர்டில் இந்த விபரம் இருக்கும். இப்படி சிறிய விஷயங்கள் என்று நம்மால் ஒதுக்கப்பட்டவற்றைக் கூட தெரிந்து கொண்டால் தான், பெரிய விஷயங்களை நம்மால் சாதிக்க முடியும்.அதுபோல், அறிஞர்கள் பேசும் கூட்டத்திற்கு செல்லும் போது அவர்கள் சொல்வதைக் கருத்துடன் கேளுங்கள். சிரத்தை எனப்படும் கவனமும் உங்களை உயர்த்தும் காரணிகளில் ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருவருடன் பேசும்போது, அவரிடமிருந்து உருப்படியான தகவல் ஒன்று கிடைக்கிறது என்றால் உடனே உங்கள் குறிப்பு நோட்டில் எழுதி வைத்து விடுங்கள். குறித்தவைகளை வாரம் ஒருமுறையாவது திருப்பிப் பாருங்கள்.இன்னொரு முக்கிய விஷயம். யாரொருவர் அதிகாலையில் சோம்பலின்றி எழப்பழகுகிறாரோ அவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.உங்கள் காலை நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும் தெரியுமா!தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து, 20 நிமிடங்களுக்குள் காலைக்கடன் முடித்து, சிறிது நேரம் கண்மூடி தியானம் செய்யுங்கள். பின் நீராடி பூஜை செய்யுங்கள். 6.30 - 7.30 அன்றைய செய்தித்தாள்களை புரட்டுங்கள். பிறகு, உங்கள் அன்றாடப்பணிகளைக் கவனிக்கத் தொடங்கி விடுங்கள்.இது எப்படி சாத்தியம் என்பதற்கும் விடை இருக்கிறது.

இரவில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உறங்கச் சென்று விட வேண்டும்.பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு இந்த வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். அதற்கு முன், நீங்கள் இந்த பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டுமே! நீங்களும் துவங்குங்கள் இதை!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி