சிறந்த வகுப்பறைக்கான நடைமுறைகள் குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்க ஆசிரியர்களுக்கு, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 21-ம் நுாற்றாண்டில் சிறந்த வகுப்பறைக்கான நடைமுறைகளை கையாள்வது குறித்த கருத்தரங்கம் டிச.18, 19 ல் சென்னை பள்ளி கல்விஇயக்குனரகத்தில் நடக்க உள்ளது.
இதற்காக ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவிப்பு செய்துள்ளனர்.21-ம் நுாற்றாண்டில் சிறந்த வகுப்பறை நடைமுறை, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, கற்பித்தலில் புதிய உத்திகள், பள்ளி மேம்பாட்டுக்கு தேவையான நடைமுறைகள், புதிய தொழில் நுட்பத்தில் உள்ளடங்கிய வகுப்பறை எனும் ஐந்து தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டும். அறிமுக கட்டுரையை நவ.15 க்குள் சென்னை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்வாகும் கல்வியாளர்கள் பட்டியல் நவ., 20 க்குள் வெளியாகும்.முழு அளவிலான கட்டுரையை நவ., 28 க்குள் அனுப்பவேண்டும்.
ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, சென்னை கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி