குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் 117 காலி பணியிடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடுபொது பணியிலு ள்ள குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவியில் 117 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இப்பதவிக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஊட்டச்சத்து அல்லது மனையியல் பாடப்பிரிவில் இளங்க லைப் பட்டம் அல்லது இளங்கலைப்பட்டத்துடன் கூடிய காந்திகிராம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஊரகபணியில் முதுகலை பட்டயப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக,www.tnpsc.gov.inஎன்ற முகவரியில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பதவிக்கான எழுத்து தேர்வு பிப்ரவரி 15ம் தேதி சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மையங்களில் நடைபெறும். முற்பகல் மற் றும் பிற்பகல் என இத்தேர்வு நடக்கும். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 26ம் தேதி. மற்ற விவரங்களை தேர்வாணையத் தின்www.tnpsc.gov.inஎன்ற இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி