TNPSC குரூப் 2 தேர்வு: தேர்வாளர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

TNPSC குரூப் 2 தேர்வு: தேர்வாளர்கள் கோரிக்கை


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிடுமாறு தேர்வாணையத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வணிகவரித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஆயிரத்து 64 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சில மாதங்களுக்கு முன் குரூப் 2 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்வான 11,500 பேர் முதன்மை தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்தத்தேர்வு வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹால் டிக்கெட்டுகள் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை என்று தேர்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தமிழகத்தில் முதன்முறையாக குரூப் 2 தேர்வு கணினி முறையில் நடைபெறவுள்ளதால் அறிவிக்கப்பட்ட நாளில் தேர்வு நடைபெறுமா என தேர்வு எழுதுவோர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. ஆகவே ஹால் டிக்கெட்டை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி