10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

10-ஆம் வகுப்பு தனி தேர்வர்களாக செய்முறைத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இன்று  (டிசம்பர் 12) விண்ணப்பிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்ச், ஏப்ரல் 2015ம் இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத விரும்பும் நேரடி தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற 11.6.2014 முதல் 30.6.14 வரையிலும் 29.10.14 முதல் 7.11.14 வரையிலும் அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கூறிய தேதிகளில் பெயர்களை பதிவு செய்யாமல் விடுபட்ட தனி தேர்வர்கள், இ.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற தனி தேர்வர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் 12ம்தேதிக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அரசு தேர்வுகள் சேவை மையங்களிலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாத தனி தேர்வர்கள் இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி