பேரூராட்சி கம்ப்யூட்டர் பணியாளர்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியிடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
மாநிலத்தில் 529 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் உள்ள சொத்துவரி, தொழில்வரி, குழாய்வரி, குடிநீர் வரி, கடை லைசென்ஸ் சலான், பிளான் ரசீதுகள், பில்கள், வவுச்சர்கள் என அனைத்திற்கும் கம்ப்யூட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. பேரூராட்சிகளில் இருந்து இயக்குனர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அனைத்து பேரூராட்சிகளிலும் ஆன்லைனில் ரசீது முறை அமலுக்கு வந்துள்ளது. அனைத்து பணிகளுமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் மட்டும் நியமிக்கப்படவில்லை. அனைத்து பணியாளர்களுமே தற்காலிக பணியிடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 12 ஆண்டுகளாக குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை.
தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் அனைத்து பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன் கூறியதாவது: கம்ப்யூட்டர் பணியாளர்கள் இல்லாவிட்டால் பேரூராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துவிடும். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்து சம்பளம் வழங்க வேண்டும். செயல் அலுவலர்களும் கம்ப்யூட்டர் இல்லாமல் பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செயல்அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்கவேண்டும். இதன் மூலம் அரசுடன் தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ளமுடியும். எந்த தகவலையும் உடனுக்குடன் பெற முடியும். பேரூராட்சி நிர்வாகம் எளிதாகும், என்றார்.
மாநிலத்தில் 529 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் உள்ள சொத்துவரி, தொழில்வரி, குழாய்வரி, குடிநீர் வரி, கடை லைசென்ஸ் சலான், பிளான் ரசீதுகள், பில்கள், வவுச்சர்கள் என அனைத்திற்கும் கம்ப்யூட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. பேரூராட்சிகளில் இருந்து இயக்குனர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அனைத்து பேரூராட்சிகளிலும் ஆன்லைனில் ரசீது முறை அமலுக்கு வந்துள்ளது. அனைத்து பணிகளுமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் மட்டும் நியமிக்கப்படவில்லை. அனைத்து பணியாளர்களுமே தற்காலிக பணியிடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 12 ஆண்டுகளாக குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை.
தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் அனைத்து பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன் கூறியதாவது: கம்ப்யூட்டர் பணியாளர்கள் இல்லாவிட்டால் பேரூராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துவிடும். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்து சம்பளம் வழங்க வேண்டும். செயல் அலுவலர்களும் கம்ப்யூட்டர் இல்லாமல் பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செயல்அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்கவேண்டும். இதன் மூலம் அரசுடன் தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ளமுடியும். எந்த தகவலையும் உடனுக்குடன் பெற முடியும். பேரூராட்சி நிர்வாகம் எளிதாகும், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி