கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-ம் மொழிப்பாட விவகாரம்: மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்றது உச்சநீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2014

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-ம் மொழிப்பாட விவகாரம்: மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்றது உச்சநீதிமன்றம்.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3ஆம் மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு நடத்தப்படாது என்ற மத்திய அரசின் உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
3ஆம் மொழிப்பாடமாக ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழியை கற்கலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் விருப்பப்பாடமாக ஜெர்மன் மொழி தேர்வை எழுதிக் கொள்ளலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஜெர்மன் அல்லது வேறு மொழியை இனி விருப்பப்பாடமாக கற்கலாம் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிதேர்வை அடுத்த ஆண்டு முதல் எழுதிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி